×

மதுரை தனியார் மறுவாழ்வு மையத்தில் ஓய்வு ஹெச்.எம். கொலை: சிகிச்சையில் இருந்த 6 பேர் கைது

மதுரை: மதுரை, ஒத்தக்கடை அருகே மலையாண்டிபுரத்தில் தனியார் மது போதை மறுவாழ்வு மையத்தில் அரியலூர் மாவட்டம், செந்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மணிவாசகம் (61) தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரது அறைக்குள் புகுந்த 6 பேர், தகட்டினால் அவரது கழுத்தை அறுத்துள்ளனர். அவர் கதறவே கால், கைகளை 4 பேர் பிடித்துக்கொள்ள 2 பேர் தலையணையால் முகத்தை  அழுத்தி கொலை செய்துள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த காவலாளிகள் உட்பட அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற 6 பேரையும் சுற்றி வளைத்தனர். தகவலறிந்து ஒத்தக்கடை போலீசார் விரைந்து வந்து, திருவில்லிபுத்தூர், ஈரோடு, கொடைக்கானலை சேர்ந்த  6 பேரை கைது செய்தனர்.   போலீசார் கூறும்போது, ‘‘இவர்கள் தங்களை வெளியே அனுப்ப நிர்வாகம் மறுத்ததால் மற்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மணிவாசகத்தை கொலை செய்துள்ளனர். வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம்’’ என்றனர். …

The post மதுரை தனியார் மறுவாழ்வு மையத்தில் ஓய்வு ஹெச்.எம். கொலை: சிகிச்சையில் இருந்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai Private Rehabilitation Center ,H.M. ,Madurai ,Ariyalur District ,Senturai ,Malayandipuram ,Othakadai, Madurai ,Madurai Private Rehab Center ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...